தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஊர்தி ஓட்டுநர் (டிரைவர்) பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 8-ம் வகுப்பு படித்திருந்தால் போதும், இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் ஜனவரி 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வேலைவாய்ப்பு 2025
காலிப்பணியிடங்களின் விவரம்
| பதவியின் பெயர் | எண்ணிக்கை |
| அலுவலக உதவியாளர் | 7 |
| ஊர்தி டிரைவர் | 2 |
| மொத்தம் | 9 |
வயது வரம்பு
இப்பணிக்கு 01.07.2025 தேதியின்படி, 18 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் – 32 வரையும், பிற்படுத்தப்பட்டோர் (பிசி) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்பிசி) – 34 வயது வரையும் இருக்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (எஸ்சி, எஸ்டி) – 37 வயது வரையும், ஆதரவற்ற கைப்பெண்கள் – 37 வயது வரையும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் கூடுதல் வரம்பு மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு 55 வயது வரை தளர்வும் வழங்கப்படுகிறது.
கல்வித்தகுதி என்ன?
அலுவலக உதவியாளர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். Xerox மற்றும் Printer இயந்திரங்கள் இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
ஊர்தி ஓட்டுநர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகனங்கள் சட்டம் 1988-ன் படி உரிய அதிகாரம் பெற்ற அலுவலரால் வழங்கப்பட இலகுரக வாகனங்களுக்கான செல்லத்தக்க உரிமம் Auto Mechanism With First Aid-ல் அனுபவம் பெற்றுள்ளதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் நிரப்பப்படும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு அதனடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதார்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த தகவல் விரைவு அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இப்பணியிடங்களுக்கு ஆர்வமும், உரிய தகுதியும் உள்ளவர்கள் இதற்கான விண்ணப்பத்தை https://tnsec.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, கல்வித்தகுதி, வகுப்பு பிரிவு, முன்னுரிமை கோரும் விவரங்களுக்கான சான்றிதழ், அடையாள அட்டை உள்ளிட்டவற்றின் நகல்களில் சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தை விரைவு தாபல் வழியாக ஆணையத்திற்கு அனுப்பி வேண்டும். மேலும், சுயமுகவரியுடன் கூடிய ரூ.30 மதிப்புமிக்க அஞ்சல் தலையை உறையில் ஒட்டு (10 * 4 Inches Postal Cover) இணைத்து அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி
தலைமை நிர்வாக அலுவலர்,
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்,
எண்.208/2, ஜவஹர்லால் நேரு சாலை,
அரும்பாக்கம், சென்னை – 600 106.
முக்கிய நாட்கள்
| விவரம் | தேதிகள் |
| விண்ணப்பம் தொடக்கம் | 18.12.2025 |
| விண்ணப்பிக்க கடைசி நாள் | 02.01.2026 மாலை 5 மணி வரை |
| நேர்காணல் | பின்னர் அறிவிக்கப்படும் |
இப்பணியிடங்கள் அரசு விதிகளின்படி, இனசுழற்சி மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமனம் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நியமன எண்ணிக்கையை கூட்டவோ அல்லது குறைக்கவோ, ரத்து செய்யவோ ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளன.



