இதில், தமிழகத்தின் சார்பில், நீர்வளத்துறை செயலர் சத்யபிரதா சாஹு, காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வழங்க வேண்டிய நீரில், நிலுவையில் உள்ள, 24.8 டி.எம்.சி., நீரை விடுவிக்க வேண்டும் என, கேட்கப்பட்டது. ஆனால், கர்நாடகாவில் மழைப்பொழிவு மற்றும் நீர்வரத்தை ஒரு வாரம் கண்காணிக்கலாம், அதன்பின், மாநிலங்கள் முன்வைக்கும் கருத்துக்கள், நீரியல், வானிலை, சார்ந்த சூழ்நிலைகளை கருத்தில் வைத்து முடிவெடுக்கலாம். காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தை கூட்டி, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை தீர்மானிக்கலாம் என்று ஆணையம் அறிவித்தது.


